1. முதல் முக்கிய குணமே அதுவா முக்கர வரைக்கும் இவனா கக்கூஸ் போக மாட்டான். இதுல பிரச்சனை அவனுக்கு இல்ல. கூட இருக்கிறவனுக்கு தான். நாத்தம் தாங்காது. தனியா வீட்டுக்குள்ளே இருந்தா கூட பரவா இல்ல. வீட்டுக்குள்ள இருக்கறதும் இவனை மாறியே தான். minus multiplied by minus is equal to plus ஆகிடும். இப்பிடி சொன்னா இவனுக்கு புரியாது. கணக்குல weaku. ஒண்ணா வயக்காட்டுல போகும்போது ரெண்டு பேரு நாத்தமும் சேர்ந்து, நாத்தம் தெரியாதுள்ள அது தான் அதுக்கு அர்த்தம். இவுனுங்களுக்கு விளக்கம் வேற குடுக்கணும். இல்லனா காக்கா பிரியாணியை முழுசா சாப்டுட்டு ஏன் முட்டை வைக்கல, அது தான் doubtu அப்டின்னுவான். சரி அத விடுவோம். நாத்தம் ஊரெல்லாம் அடிக்க வைப்பான். இது முதல் பிரச்சனை. 2. ரெண்டாவது முக்கிய பிரச்சனை இவன் ஒரு சோம்பேறி நாய். எந்த வேலையும் செய்யாம கைக்கு காசு வரணும்னுவான். அதுக்காக இவன் என்கிட்ட பட்ட பாடு. இருந்தாலும் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை தேடி போனான்ற மாறி. திருப்பி திருப்பி முயற்சி பண்ணுவான். இந்த முயற்சியை நல்ல வழில உபயோகிச்சு இருந்தா இவன் எப்பவோ பணக்காரன் ஆகி இருப்பான். ...