ஏம்ப்பா நீயே சொல்லுப்பா யாருப்பா நல்லவன் யாருப்பா கெட்டவன்? அதை விலாவாரியா சொல்றேன் நல்லா கேட்டுக்கப்பா. மனசுல நல்லதே நினைக்கிறவன் தாம்பா நல்லவன். புரியல தெளிவா சொல்லுப்பா. நேர்மையா இருக்கணும்னு நினைக்கணும். ஒழுக்கமா நடக்கணும்னு நினைக்கணும். சம்பாரிச்சி தான் வாழனும். வாழ்க்கையில முன்னேறணும்னு நியாயமான வழியில உழைக்கணும். இப்படி எல்லா நல்லவனும் நடந்துக்கரானாப்பா? நான் மனசுல நெனைக்கனும்னு தான் சொன்னேன். எல்லா தடவையும் நேர்மையா நடக்க விட மாட்டானுங்கப்பா நம்ம நாட்டுல. அதனால தான் நினைக்கனும்னு சொன்னேன். இதை பத்தி மேல சொல்றேன். இப்போ கெட்டவன் யாருன்னு சொல்றேன் அதையும் கேட்டுக்கோ. அந்த தனி breedu நாய்க்கு நல்ல எண்ணமே வராது. ஏம்பா அப்புடி சொன்ன? தெரு நாய்க்கு கூட நல்ல எண்ணம் வரும்ப்பா. இவனுக்கு வராது. அதை தான் அப்படி சொன்னேன். நாயை விட கேவலமானவனா அவன். சரி அவன் குணத்தை பத்தி சொல்லுப்பா. எவன் pocketல pick pocket அடிக்கலாம். எவன் குடியை கெடுக்கலாம்னே திரிவான். குடியை கெடுத்துடுவானாப்பா? இவன் குடிக்கறதே கெட்டு போன ஊசன பருப்பு தண்ணி தான். அப்ப பருப்பு? அது மட்டும் நல்லதா குடுக்கட்டுமே, Ration கடைக்...
உலகத்துல இருக்குற எல்லா மக்களுக்கும் மொதல்ல பொங்கல் வாழ்த்த தெரிவிச்சிக்குவோம். பொங்கலோட சிறப்பு என்ன? அதை யாருக்காக கொண்டாடுறாங்கன்னு சொல்றேன் தெரிஞ்சுக்கோ. Popcorn இல்லாம எப்படி படம் பாக்கறது? திருவண்ணாமலை சோம்பேறி பொங்கல் அன்னைக்கு என்ன பண்றான்னும் சொல்றேன் அதையும் தெரிஞ்சுக்கோ. பொங்கல்ங்கறது உழவர் திருநாள் கிடையாதுப்பா. அதை எப்படிப்பா சொல்ற? பொங்கலை ஆதி காலம் தொட்டே அரசன் முதல் வணிகன் வரை எல்லோரும் தான் கொண்டாடி வர்றாங்க. அப்புறம் அது எப்படிப்பா உழவர் திருநாள்? அட ஆமாம்பா புரிஞ்சுது. அப்போ பொங்கல் யாருக்காக கொண்டாடுறாங்க? பொங்கல்ங்கிறது சூரிய தேவனை வழிபடுற விழாப்பா. யாருப்பா இந்த சூரிய தேவன். அதை விளக்கமா சொல்றேன். மொதல்ல popcorn சாப்பிடு ஆறி போய்டும். சரி திருவண்ணாமலையில எல்லோரும் பொங்கலை சிறப்பா கொண்டாடுறதா ஊரே பேசுக்குதேப்பா. 5 மணிக்கெல்லாம் எழுந்திருச்சி. ஆமா ஆமாம் 5 மணிக்கெல்லாம் எழுந்திருச்சி, சரக்கடிக்க போயிடுவான். ஏன்னா அவன் படுக்கையை விட்டு எழுந்திரிக்கறதே சாயங்காலம் 5 மணிக்கு தான். என்னப்பா சொல்ற அது PM ஆ AM ன்னு நெனச்சிட்டனேப்பா. அதைத்தான் சூசகமா பொத்தாம்...