சங்கத்து ஆபிசர் - 11 இளங்கோ
1) நீங்க Collegeல Class நடத்துனா எல்லாருக்கும் புரியுமா?
a) ஆரம்பத்துல செய்யுள்ன்றது புரியாத புதிர்ன்னு சொல்லிட்டேன். அதனால எல்லாரும் உஷாரா முன்னாடியே தூங்கிட்டாங்க.
b) நீங்க புரிஞ்சு படிச்சா Microsoft க்கே Chairman ஆகலாம்னு சொன்னேன். நீங்க எங்களை புரிஞ்சிக்கிட்டது அவ்ளோதான் சார்னு சொல்லிட்டாங்க.
c) Examல புரியற மாதிரி எழுதினா எல்லாத்தையும் படிச்சி திருத்தரவரு நல்ல Mark போடுவார்னு சொன்னேன். எங்களால உங்களுக்கு ஏன் சார் வீண் சிரமம்னு சொல்லிட்டாங்க .
d) புரிஞ்சுதான்னு கேட்டா எல்லாரும் ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணினு பாட ஆரம்பிச்சிடுறானுங்க.
2) நீங்க இளங்கோவடிகள் எழுதுற கவிதை மாதிரியே பேசறீங்களே, சினிமால பாட முயற்சி பண்ணி இருக்கீங்களா?
a) தாலாட்டு பாடல் நல்லா பாடுவேன்னு Music Director கிட்ட போனா, எல்லா தடவையும் சார் தூங்கிட்டு இருக்கார்னு சொல்லி திருப்பி அனுப்பிடறானுங்க.
b) ஒரு தடவை என் தாலாட்டு பாடலை கேட்டு பாருங்க தூங்கிடுவீங்கன்னு சொன்னா, எல்லாரும் வித்யாசமா பாக்கறானுங்க.
c) நான் பாடுனா உன்னிகிருஷ்ணனுக்கு போட்டியா வருவேன்னு பாட விடாம சதி பன்றானுங்க.
d) ஒரு நல்ல Music Directorக்கு Chance குடுக்கலாமேன்னு wait பண்றேன். நம்மால ஒருத்தன் வாழ்ந்ததா இருக்கட்டுமேன்னு தான்.
சங்கத்து ஆபிசர் - 12 பாலாஜி
1) உங்களுக்கு புடிச்ச பொட்டலம் எது?
a) எப்புடி கேட்டாலும் உங்களுக்கு குடுக்க மாட்டேன்.
b) சொன்னா வாங்கி தருவீங்களா? அப்பனா எழுதிக்கோங்க. ஒரு கிலோ பாதாம் பருப்பு ஒரு கிலோ பிஸ்தா பருப்பு...
c) எங்க ஆயா சட்னிக்கு வச்சிருந்த பொட்டு கடலை தான் எனக்கு ரொம்ப புடிக்கும்.
d) கையில இருந்த பொட்டலத்தை சாப்ட்டு சொல்றேன். யாரையும் நம்ப முடியாது. புடிங்கிக்கிட்டீங்கன்னா.
2) நீங்க எந்த கம்பேனிக்கு Medical Repa வேலை பாத்தீங்க?
a) ஒரு கம்பேனி Medical Rep ஆனா Motor Bike வாங்கி தரேன்னு சொன்னாங்க. ஹாயா ஊர் சுத்தலாம்னு அந்த கம்பேனிலேயே சேந்துட்டேன்.
b) ரொம்ப பெரிய கம்பேனி அது. அப்புடி சொன்னா தான் பொண்ணு குடுப்பாங்கன்னு வீட்ல சொல்ல சொன்னாங்க.
c) மொதல்ல Vicksu கம்பேனிக்கு தான் போனேன். ஆனா அது வெறும் சப்பர மிட்டாய் தான். Medical Rep தேவை இல்லைனு சொல்லி அனுப்பிச்சிட்டாங்க.
d) எல்லா கம்பேணியும் பாத்துட்டு கடைசில ஒரு கம்பேனில, daily பொட்டலம் வாங்கி தர்றதா சொன்னாங்க. ஆபத்துக்கு பாவமில்லைனு அதுலயே சேந்துட்டேன்.
சங்கத்து ஆபிசர் - 13 ரவி ஷங்கர்
1) உங்க Internetக்கு என்ன Anti-Virus போட்டிருக்கீங்க?
a) McAfee மட்டும் தான் OCலே குடுத்தாங்க. மத்ததுக்கு எல்லாம் Amount கேக்கறாங்க.
b) ஒரு Aunty வேற Anti - Virus குடுத்தாங்க. ஆனா அத use பண்ணா என் பொண்டாட்டி வீட்லயே சேக்க மாட்டேண்டா. நான் கொஞ்சம் பயந்த சுபாவம். அடி தாங்க மாட்டேன். அதான் சரின்டேன்
c) Corona Virus வந்தப்ப கூட நான் McAfee தவிர வேற எதுவும் use பண்ணதில்ல. கம்பேனில note பண்ணிடுவேன்னு சொல்லிட்டாங்க
d) Internetல McAfee Anti -Virus போடாம என் பொண்டாட்டி விட மாட்டேண்டா. Internetல எதாவது Auntya பாக்கறானான்னு அவளுக்கு doubtu.
2) நீங்க எப்பயுமே Schoolla அமைதியா இருக்கீங்களே எப்புடி?
a) பக்கத்துல உக்காந்த பையன் என் pencila திருடிட்டான். பேனாவையும் திருடிடுவான்னு கமுக்கமா நோட் பண்ணினு இருந்தேன். அது தான் அமைதியா இருந்தேன்
b) Classல அமைதியா இருந்த 5 mark போடறேன்னு சொன்னாங்க. கடைசில ஏமாத்திட்டாங்க
c) என் லட்சியமே உலக அமைதிக்கு Nobel Prize வாங்க தான். அது தான் இப்பவே practice பண்ணேன்.
d) Classல சத்தம் போட்டா தான் Teacher பாத்து கேள்வி கேப்பாங்க. அதுல இருந்து escape ஆக தான் அமைதியா இருந்தேன்.
சங்கத்து ஆபிசர் - 14 பாலாஜி
1) நீங்க Class எடுத்து முடிச்சதும் Students கேக்கற முதல் கேள்வி என்ன?
a) நல்லா நடத்துனீங்க சார். ஆனா எந்த Subject னு மட்டும் நீங்க கடைசி வரை Suspense ஆவே வச்சிருந்தீங்க. நீங்க சொல்லல கண்டுபுடிச்சிருக்கவே முடியாது சார்.
b) நல்லா தூங்கிட்டு இருந்தோம். அதுக்குள்ளேயே எழுப்பிட்டீங்களே சார்.
c) ஆயிரம் ரூபாய்க்கு class எடுக்க சொன்னா, பத்தாயிரம் ரூபாய்க்கு class எடுக்கறீங்களே சார்.
d) எங்க ஏரியால ஒரு பெருசுக்கு தூக்கமே வரளியாம் சார், ஒரு வாட்டி நம்ம class க்கு கூட்டிட்டு வரட்டுமா சார்.
2) நீங்க Kuch Kuch Hotha Hai எத்தனை தடவை பாத்தீங்க?
a) படத்துல நடிச்ச Kajoluku நெஜத்துலயே வயசாகர வரை பாத்தேன்.
b) தூங்கி எழுந்திருக்குற அப்போ ஒரு தடவை, தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு தடவை , வேற எப்பவும் Stricta பாக்கறதில்ல.
c) எனக்கு ஹிந்தி தெரியும்னு எல்லாரும் ஒத்துக்குற வரை பாத்தேன்.
d) CD தேஞ்சிடுச்சி விட்டுடலாம்னு பாத்தேன். ஆனா அதுக்குள்ள OTT வந்துடிச்சி என்ன பண்ண?
சங்கத்து ஆபிசர் - 15 பாலாஜி
1) NIITல நீங்க எவ்ளோ mark எடுத்தீங்க?
a) ஏக் தோ தீன் போட்டு optiona Choose பண்ணேன். Pass ஆயிட்டேன். இந்த ரகசியம் நமக்குள்ளே இருக்கட்டும்.
b) NIITக்கு Marketing பண்றேன் பாத்து mark போடுங்கன்னு கேட்டேன். First Mark போட்டுட்டாங்க.
c) முன்னாடியே படிச்சி வச்சா கண்ணு போட்டுடுவாங்கனு அப்புறம் படிச்க்கலாமேன்னு விட்டுட்டேன். கடைசில படிக்க முடியாமலே போச்சு.
d) நான் எடுத்த mark தொண்ணூத்தி அஞ்சி. நீங்க நம்பலேன்னா எனக்கு இன்னா வஞ்சு.
2) நீங்க Software கம்பேனில என்ன வேலை பாத்தீங்க?
a) எல்லாரும் வேலை பாத்தாங்களான்னு பாத்துகிட்டே இருந்தேன்.
b) வேலை இல்லா பட்டதாரி படம் பாத்துட்டு First Halfல வர்ற மேரியே நல்லா வேலை பாத்தேன்.
c) உன்னை நம்பி வேலைய குடுத்தா இப்புடியாடா வேலை பாப்பன்னு திட்டுவாங்கன்னு வேலை பாக்காம இருந்துட்டேன்
d) நான் படிச்ச Fibanocci Number வேலையில வரவே இல்லை. படிச்சதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை. நான் என்ன பண்ண முடியும்.
சங்கத்து ஆபிசர் - 16 சுதாகர்
1) நீங்க இவ்ளோ sincerea படிச்சி எந்த Collegeku Professor ஆனீங்க?
a) நான் sincerea படிச்சேன்னு யாரோ தப்பா உங்க கிட்ட கோல் மூட்டிட்டாங்க.
b) IIT- Kharagpurல கூப்பிட்டாங்க. ஆனா திருவண்ணாமலைல இருந்து Direct Bus இல்லைனு விட்டுட்டேன்.
c) எங்க ஆயா இதுக்கு மேல collegeல இருந்தா கெட்டு போய்டுவேன்னு சொல்லி கம்பேனிக்கு அனுப்பிடுச்சி.
d) Professor ஆகி studentsa மேய்க்கறதுக்கு, நாலு பசு மாடு வாங்கி மேய்ச்சா பாலாவது கரக்கும்னு, நான் படிச்ச college professore சொல்லிட்டாரு.
2) நீங்க வேலை செய்யற கம்பேனில சம்பளம் ஒழுங்கா குடுக்குறாங்களா?
a) 28 ஆம் தேதியே வந்துடுது. Bonus கேட்டா மட்டும் what nonsensenu சொல்லிடறாங்க.
b) ஒழுங்கா சம்பளம் குடுக்கலேன்னா கம்பேனியோட முக்கியமான machine pluga புடுங்கிடுவேன்னு மிரட்டி வச்சிருக்கேன். அது தான் ஒழுங்கா வருது.
c) சம்பளம் இல்லாம யார் வேலை செய்வா. எங்க வீட்டு பச்சை கிளி கூட சாப்பாடு வச்சா தான் எங்க கிட்ட பேசுது.
d) சம்பளம் ஒழுங்கா வரலேன்னா, முக்கியமான client meetingல, Income Tax Raid வருதுன்னு புரளிய கெளப்பிடுவோம்.
சங்கத்து ஆபிசர் - 17 பிரசன்னா
1) நீங்க உங்க ஊரு நிலத்துல நாத்து நட்டு இருக்கீங்களா?
a) நான் கம்பேனியிலேயே அந்த வேலை தான் செய்யறேன்.
b) நான் நாத்து நடுற மாதிரி படம் புடிச்சி வச்சிருக்கேன். ராம ராஜன் படத்துக்கு ஒரு Friend Character காலியா இருக்குன்னு சொன்னாங்க. நான் தான் கம்பேனி விளம்பரத்துக்கு ஆகுமேன்னு எடுத்து வச்சேன்.
c) இத்தனை பேர் இருக்கும்போது என்ன பாத்து மட்டும் ஏன் அந்த கேள்வியை கேட்டீங்க.
d) நாட்டாமைக்கு நாத்து நட கூட தெரியல, இவுரு எப்புடி நடு நிலையா பேசுவாருன்னு ஊரு சொல்லிட கூடாதுன்னு ஒரு photo pocketலேயே வச்சிருக்கேன்.
2) நீங்க வேலை செய்யற கம்பேனி உங்கள நம்பி இருக்கா, இல்லை நீங்க அத நம்பி இருக்கீங்களா?
a) ரெண்டு பெரும் Customer ஒழுங்கா காசு குடுப்பாருன்னு நம்பிக்கைல தான் இருக்கோம். நீங்க எதுவும் கொழப்பத்தை உண்டு பண்ணிடாதீங்க .
b) நம்பிக்கை தான் எல்லாம்னு, கம்பேனி manager ரொம்ப நாளா Bonus குடுக்காம டபாய்க்கறாரு.
c) நான் நம்புறேனோ இல்லையோ, எங்க வீட்டு பால்காரர், இவன் ஒழுங்கா பால் காசு குடுத்துருவான்னு நம்பி தான் பால் ஊத்தறாரு.
d) கம்பேனியே என்ன நம்பி தான் இருக்குன்னு என் பொண்டாட்டி கிட்ட சொல்லி பாத்துட்டேன். இது நம்பர மாதிரி இல்லைனு சொல்லிட்டா. நீங்க நம்பறதும் நம்பாததும் எனக்கு பிரயோஜனம் இல்லை.
சங்கத்து ஆபிசர் - 18 உதய் குமார்
1) நீங்க எந்த ஊரு ராஜா. உன்மையை சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லுங்க...
a) தெரிஞ்சா எதிரி நாட்டுக்காரன் படை எடுத்துடுவான். அப்புறம் போருக்கு போக வேண்டி இருக்கும்.
b) எங்க சமஸ்தானம் இங்கே இருக்கு, அதுக்கு ராஜா எங்கேன்னு ஒரே நச்சு பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.
c) ஏற்கனவே ஊர் நாட்டாமை என்னை தீர்ப்பு சொல்லு தீர்ப்பு சொல்லுன்னு ஓரே தொந்தரவு. இதுல இது வேறயா?
d) ஏற்கனவே எங்க ஆயா, என் பேச்சை கேக்க மாட்றான்னும். இது தெரிஞ்சா டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதேனு பாட்டு போட்டு நச்சு பண்ணும்.
2) நீங்க யாருக்கு ஒட்டு போடுவீங்க?
a) சந்தேகமே வேணாம் K கம்பெனிக்கு தான். இவ்ளோ buildup குடுத்திருக்காரே.
b) ரொம்ப நாளா எங்க ஆயா காட்டுக்கு வா காட்டுக்கு வான்னு கூப்டினு இருக்கு. போய்ட்டு பத்து வருஷம் கழிச்சி வந்து சொல்றேனே.
c) ஒட்டு போடலாம்னு தான் போனோம். ஆனா வழியிலேயே பாக்கியலட்சுமி serial பாக்கலேன்னு ஞாபகம் வந்துடிச்சி. அது தான் திரும்ப வந்துட்டோம்.
d) ஒட்டு போட காசு வாங்க மாட்டேன்னு சொன்னதுல இருந்து, Boothu பக்கம் போனா ஒருத்தன் மொறச்சி மொறச்சி பாத்துனே இருக்குறான். அது தான் போகல.

Comments
Post a Comment